செப் 1-ந்தேதி முதல் கல்லூரிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By 
Colleges opening from Sept. 1 Publication of guidelines

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனை, அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு :

* கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.

* மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

* மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.

* தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

* நோய்த்தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்.

* கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this story