நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார் : விசாரணைக்கு ஏற்பு
 

By 
Complaint regarding the death of actor Vivek Acceptance of inquiry

நடிகர் விவேக், மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்  விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். 

இது திரையுலகினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால்தான், அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில், புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Share this story