முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலி நிகழ்வு..

By 
saithai

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். 

கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், அவரது உடல் மீட்கப்பட்டது. 

வெற்றி துரைசாமியின் உடல், நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை, சி.ஐ.டி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெற்றி துரைசாமி உடலுக்கு ஆளுநர்  ஆர்.என்.ரவி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி இல்லத்திற்கு நேரில் சென்று, இமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த அவரது மகன் வெற்றி துரைசாமியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

சென்னையில், வெற்றி துரைசாமியின் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, நேற்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

Share this story