தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் : டிடிவி தினகரன்

By 
Government of Tamil Nadu should give proper explanation DTV Dinakaran

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு குறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது :

கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும்  மக்களுக்கு, அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிப்படையான நிர்வாகம் பற்றி, நிறைய பேசும் தி.மு.க அரசு, மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
*

Share this story