சென்னையில், ரயில் சேவையில் மாற்றம் : நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச்சில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இருப்பினும், சரக்கு ரயில் சேவை இயக்கப்படுகிறது. கொரோனா 2-வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில், குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே அறிவிப்பு :
இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
'சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே, நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.50 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1, 1.20, 2 மணி, தாம்பரம் 11.30, 12.20, 12.40, 1.40, 2.20 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து அவை இயக்கப்படும்.
தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் :
இதுதவிர, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20, 11.30, மதியம் 12.10, 12,30, 1.50 காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25 ஆகிய மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*