சென்னையில், சட்டென்று மாறுது வானிலை..தெற்கே வருகிறது கனமழை..
தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
24 மணி நேரத்தில் :
வடதமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரியில் நாளை (30-ந் தேதி) கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
கனமழை :
தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம். தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்.
செப்டம்பர் 1, 2 ஆகிய 2 நாட்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரள- கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.