தமிழகத்தில், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : இன்று முன்பதிவு தொடங்கியது

By 
In Tamil Nadu, corona vaccine for boys Booking started today

கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் வரும் 3-ம் தேதி முதல்,15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

3-ந்தேதி :

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் உள்பட சிறார்களுக்கு, தடுப்பூசி போடும் பணியை 3-ம் தேதி, போரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதற்கிடையே, 15 முதல் 18 வயது உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவின் இணையதளம் :

இந்நிலையில், இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

கோவின் இணையதளத்தில், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாளை மறுநாள் முதல், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கியது.
*

Share this story