கொரோனா பரவல் அதிகரிப்பு : தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..

 

By 
vairus2

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலும் நேற்று 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மொத்தம் 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ராஜேஷ் பூஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
 

Share this story