கொரோனா 3-வது அலையை தடுக்க, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.?

By 
Increased restrictions in Tamil Nadu to prevent Corona 3rd wave.

கொரோனாவை கட்டுப்படுத்த ஆங்காங்கே விழிப்புணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

3-வது அலை :

இந்த சூழலில், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.

இதனால், தமிழக எல்லையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் 3-வது அலை தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலோசனை :

இந்நிலையில், வருகிற 9-ந்தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வர உள்ளது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. 

ஆனால், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

அறிவிப்பு :

கொரோனாவை கட்டுப்படுத்த 9-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் தளர்த்தாமல் இப்போது உள்ளது போல் நீடிக்கலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து இன்று மாலை அரசின் சார்பில், அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story