ஐபிஎல் கிரிக்கெட் : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

By 
traffic3

சென்னை பெருநகர போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (10-ந்தேதி), 14, 23, 24 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்தினை கட்டுப்படுத்த, போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயின்ட் வழியாக கொடி மரச் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

*காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.

* தொழிலாளர் சிலையில், வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது, வெலிங்டன் பாயின்ட் மற்றும் பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

* பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

* பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் "யு" திருப்பம் செய்ய அனுமதியில்லை, அதற்கு பதிலாக, வாகனங்கள் வெலிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும், அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் ரோடு சாலையை நோக்கி ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this story