நடிகர் மம்முட்டி உள்பட, 300 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு ; ஏனென்றால்..

By 
Police prosecute 300 people, including actor Mammootty; Because ..

கொரோனா விதி முறைகளை மீறியதாக நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி மற்றும் 300 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கேரள போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :

ஆகஸ்ட் 3 ஆம் தேதி கேரளாவில் தனியார்  மருத்துவமனை ஒன்றில், அறுவை சிகிச்சைக்காக ரோபோவை பயன்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.  

இந்த விழாவில், கேரள நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி கலந்து கொண்டனர். 

மேலும், இந்த விழாவின்போது சுமார் 300 பேர் அங்கு கூடியதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் மம்முட்டி, ரமேஷ் பிசாரடி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 300 பேர் மீது தொற்றுநோய், நோய் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்  கீழ் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம்' என கூறியுள்ளனர்.

Share this story