பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: தெற்கு ரயில்வே முக்கிய செய்தி..

By 
train4

தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 14,15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. பணி நிமித்தமாக சென்னைக்கு வந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் தங்கள் கிராமத்தில் கொண்டாட விருப்பப்படுவார்கள். அந்த வகையில் ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள்.

அவர்களுக்கு வசதியாக ரயில்வே துறை சார்பாக சிறப்பு ரயில் மற்றும்  போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வருகின்ற 14 மற்றும் 16ஆம் தேதிகளில் 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்கள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்று சேருகிறது.  

இதே போல தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத 22 பெட்டிகளும்,  இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர்,  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தூத்துக்குடிக்கு சென்று சேருகிறது.

இதே போல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் பொங்கல் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.  அதன்படி வருகின்ற 11, 13 மற்றும் 16ஆம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது இரவு 9 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11:15 மணிக்கு சென்று சேருகிறது.

இதே போல நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 12. 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்பட உள்ளது.  இந்த ரயில் மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3. 15 மணியளவில் தாம்பரம் வந்து சேர்கிறது. இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி பெட்டிகள், இரண்டு முன் வகுப்பு பெட்டிகள் இரண்டு முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share this story