துணைவேந்தர் தேடல் குழு அறிவிக்கைகள்.. திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

By 
rnr11

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு யுஜிசி பிரதிநிதி அடங்கிய குழு அமைத்து வெளியிட்ட அறிவிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக ஆளுநர், சில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்புக்கு உட்பட்டு தமிழக அரசு செயல்படும் என நம்பிக்கை வைத்து, துணைவேந்தர்கள் நியமனத்துக்கான பரிந்துரையை வேந்தருக்கு வழங்கும் மூன்று பேர் கொண்ட தேடல் குழுவுக்கான அறிவிக்கையை திரும்பப் பெறுகிறார். 

அரசியல் சாசன நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு ஏற்ப யுஜிசி தலைவரால் முன்மொழியப்படுபவர் உள்ளிட்ட தேடல் குழுக்களை இனி அரசு அமைக்கும் என ஆளுநர் நம்பிக்கையுடன் உள்ளார்.

தமிழக ஆளுநர் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில். பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணை வேந்தர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்களைக் கண்டறிய தேடல் குழுக்களை அமைத்து அறிவிக்கை எண் 01, நாள்: 06.09.2023, அறிவிக்கை எண் 02, நாள்: 06.09.2023 மற்றும் அறிவிக்கை எண் 03, நாள்: 06.09.2023 ஆகியவற்றை வெளியிட்டார்.

தமிழக அரசும் சிறப்பு அரசிதழ் எண்.337, நாள்: 13.09.2023, சிறப்பு அரசிதழ் எண்.452, நாள்: 20.09.2023 , சிறப்பு அரசிதழ் எண்.492, நாள்: 19.10.2023 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு முறையே துணைவேந்தர்களை நியமிக்க பரிந்துரை வழங்க தேடுதல் குழுக்களை நியமித்து மூன்று அறிவிக்கைகளை அரசிதழில் வெளியிட்டது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு இல்லை. எனினும், சென்னை உயர் நீதிமன்றம் ரிட் மனு எண் 28147/2022 மற்றும் 4174/2023 19.12.2023 அன்று வி.பழனியப்பா Vs வேந்தரின் செயலாளர், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பிறர், என்ற வழக்கின் தீர்ப்பில் விதி 7.3 (ii) பல்கலைக்கழக மானியக்குழு (உயர்கல்வி ஒழுங்குமுறை 2018 தர பராமரிப்புக்காக,

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிக்க குறைந்தபட்ச தகுதி) அல்லாத வகையில் வேறெந்த தேடல் குழு மூலம் துணைவேந்தரை தேர்வு செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் உயர்நீதிமன்றம், ''அரசாணை எண் 3, தலைமை செயலகம் (உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி), நாள்: 20.01.2021 புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் 14(5) பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட “தேடுதல் குழு மூலம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தை அனுமதிக்க முடியாது" என்று குறிப்பிட்டது.

 

Share this story